அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு.. அதிமுக IT விங் நிர்வாகிக்கு ஜாமின்

x

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த‌தால் கைது செய்யப்பட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு காட்பாடி நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கோபாலபுரத்து விசுவாசி என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதை, அதிமுக ஐடி விங் நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமார் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து திமுகவினர் அளித்த புகார் அடிப்படையில், கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த‌து. அப்போது, அருண்குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்