அம்மன் பாதத்தில் வைக்கப்பட்ட விளக்கு... திடீரென அணைந்து மீண்டும் தானே எரிந்த அதிசயம்..!

x

கிருஷ்ணகிரியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

அப்போது அம்மனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கின் சுடர் அணைந்து பின்னர் பிரகாசமாக எரிந்தது.

காற்றில் இதுபோன்று நடந்திருக்கும் என நினைத்த கோவில் பூசாரி, தொடர்ந்து இதேபோன்று எரிவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

இதனால் ஆச்சரியமடைந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து, தங்கள் செல்போனில் படம் பிடித்து தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்