அரசு நிலங்களை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு - பெண் அதிகாரி அதிரடி டிஸ்மிஸ்

x

அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் மாவட்ட பதிவாளர் சிவப்பிரியா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை விருகம்பாக்கம் சார் பதிவாளராகப் பணியாற்றிய போது சிவப்பிரியா ஏரிகள், மாநகராட்சி இடங்கள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், பட்டா வழங்கப்படாத கிராம நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட 44 அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நிலுவையிலுள்ள பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக கடந்த 5 வருடங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் மாவட்ட பதிவாளர் சிவப்பிரியாவை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்