"மாதம் தோறும் நடத்த முடிவு..." - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

x

சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசால் அமைக்கப்பட்ட தொலைநோக்குச் சிந்தனையாளர் - கலைஞர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இணைத் தலைவர்கள்

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை தாங்கினர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி உள்ளார் என்றும் தெரிவித்தார். அவரின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் நூல்கள் வெளியிட உள்ளதோடு, மாதம் தோறும் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்