பேக்கரி கேக்கில் பூஞ்சை...அதிர்ந்து போன வாடிக்கையாளர் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

x

காரைக்குடி அருகே காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம் கல்லுக்கட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் வாங்கிய கேக்கில், பூஞ்சை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து புகாரின்பேரில் பேக்கரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், காலாவதியான பிரட் மற்றும் கேக் வகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதிகமுறை பயன்படுத்திய 200 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேக்கரிக்கு சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்