பட்டாசு ஆலை வெடி விபத்து... உடல் சிதறி பலியான 2 பெண்கள்... சாத்தூர் அருகே அதிர்ச்சி

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் ரோல் கேப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 100-க்கும் அதிகமானோர் வேலை செய்து வந்த நிலையில், இன்று பட்டாசு மருந்துகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சட,சட வென பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மண்குண்டாம்பட்டியை சேர்ந்த பாலசரஸ்வதி, முருகலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசார் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி விபத்து ஏற்பட்ட ஆலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்