உலகை மிரட்டும் BF 7 கொரோனா... தாஜ்மஹால் சுற்றுலா - வெளியான அதிரடி அறிவிப்பு

x

சீனா மற்றும் பிற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் வருகின்றனர். கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தாஜ்மஹாலை பார்வையிடும் வரும் மக்கள் வருகைக்கு முன் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதுகுறித்து ஆக்ரா மாவட்ட சுகாதாரத் தகவல் அலுவலர் அனில் சத்சங்கி கூறுகையில், "தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்வையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.




Next Story

மேலும் செய்திகள்