ராங் ரூட்டில் ஃபேமிலி ரைடு.. போலீசாருக்கே ரூல்ஸ் சொன்ன தம்பதி - நடுரோட்டில் நடந்த வாக்குவாதம்

x

திருப்பூரில், போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் விதித்த போலீசாரிடம், பெண் ஒருவர் ஏகவசனத்தில் பேசிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூரில் உள்ள கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் பிற வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்த தம்பதியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதை ஏற்க மறுத்த தம்பதி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கணவருக்கு ஆதரவாக பேசிய பெண், குழந்தை முன்னிலையில் காவல் உடையுடன் அபராதம் விதிக்கக்கூடாது என ரூல்ஸ் பேசினார்...


Next Story

மேலும் செய்திகள்