"வேலை ஒன்னும் நடக்கல.." கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் - பரபரப்பான பூந்தமல்லி நகர்மன்ற கூட்டம்

x

பூந்தமல்லி நகர் மன்ற கூட்டம் பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற அரங்கில் நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் கவுன்சிலர்களும், நகர மன்ற தலைவர், நகராட்சி ஆணையர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சியில் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் பணிகள் தொடங்கப்படுவதாக முகநூலில் போட்டோக்களை போட்டு பதிவிடுவதாக நகர மன்ற உறுப்பினர் விவாதம் செய்தார். நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக பெண் நகர மன்ற உறுப்பினர்களின் கணவர்களை அனுமதிக்கவில்லை. கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்