"உங்க மேல கேஸ் போட முடியாதா சார்?" - சென்னை சாலையை மிரளவிட்ட தனி ஒருவன்

x

சென்னை போரூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருடன் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுனர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.

போரூர் ஏரி சந்திப்பு அருகே, பெண் பயணியுடன் வந்த ஆட்டோவை, தடுத்து நிறுத்திய காவல் உதவி ஆய்வாளர் ராஜன், வாகன நெரிசலை ஏற்படுத்தும் விதமாக வந்ததாக கூறிப் புகைப்படம் எடுத்தார்.

பதிலுக்கு ஆட்டோ ஓட்டுனர், காவல் உதவி ஆய்வாளரை தனது செல்போனில் படம் எடுத்தார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, ஆட்டோ ஓட்டுனர் திடீரென்று சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வாக ஓட்டிகளும் போக்குவரத்து போலீசாரும் சமாதானப்படுத்தியதை அடுத்து, இருவரும் சமாதானம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்