புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா - கட்டாயமாகும் மாஸ்க்!

x

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடற்கரை, திரையரங்கம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடம் இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்துதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது, தானும் முகக்கவசம் அணிந்து அதனை செயல்படுத்தினார்..


Next Story

மேலும் செய்திகள்