கொரோனா ஊரடங்கு... பணிக்கு வராத அரசு ஊழியர்கள் - தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு | TN Govt

x

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை, பணிக்காலமாக அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய துறைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 2021ம் ஆண்டு மே 10 தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரையிலான ஊரடங்கு காலக்கட்டத்தில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக கருத அனுமதித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்பத்தினரோ, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்திருந்தாலோ, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை சிறப்பு விடுப்பாக கருதவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்