சர்ச்சையான ஜெபக்கூட்டம் - போராட்டத்தில் குதித்த மக்கள்

x

நேருநகரில் அனுமதியின்றி ஜெப கூட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் பலர் வாரந்தோறும் இந்த குடியிறுப்பு பகுதியில் ஒன்றுகூடி ஜெப கூட்டம் நடத்துவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும், இடையூறும் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மற்ற ஊர்களில் இறந்த சடலங்களை இங்கு கொண்டு வந்து, இறுதிச் சடங்குகளை செய்தபின்பு, அவரவர் ஊர்களுக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி, போராட்டம் நடத்தினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஜெபக்கூடத்திற்கு எதிராக பக்தி பாடல்களை இசைத்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்