இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்...தமிழகத்தில் எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் ?

x

காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தலுக்கான சென்னை சத்திய மூர்த்தி பவனில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 9 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க சத்தியமூர்த்தி பவனில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சீட்டுகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நிலையில், தமிழகத்திற்கான தேர்தல் அதிகாரியாக பிரதாப் பானு சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்களிக்க தகுதியுள்ள நபர்கள், அடையாள அட்டை மற்றும் மற்றும் சான்றுகள் சரிபார்ப்புக்கு பின்ரே வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்