திமுக எம்.பி -க்கு சொந்தமான இடம் ஜப்தி - நீதிமன்றம் அதிரடி

x

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை தனியார் வங்கியில் வைத்து திமுக எம்பி கடன் பெற்றுள்ளார். இதை செலுத்த காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், திமுக எம்.பிக்கு எதிராக தனியார் வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, திமுக எம்பி ரமேஷ் நிலத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை தனியார் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்தனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிலத்தை காவல் காத்த குடும்பத்தினர், எங்கு செல்வதென்று தெரியாமல் பரிதவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்