விடப்பிடியாக பேருந்தில் ஏறிய பயணி நெஞ்சில் எட்டி உதைத்து தள்ளிய நடத்துநர் - கர்நாடகாவில் பரபரப்பு

x

கர்நாடக அரசுப் பேருந்தில் இருந்து பயணி ஒருவரை நடத்துநர் எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரில் அரசுப் பேருந்தில் போதை ஆசாமி ஒருவர் ஏற முயன்றார்... அவரை அப்பேருந்தின் நடத்துநர் கீழே இறங்குமாறு வற்புறுத்தியும் தொடர்ந்து அந்த நபர் பேருந்தில் ஏற முயன்றார்... இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துநர் போதை ஆசாமியை காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளினார்... தான் உதைக்கப்படுவது கூட தெரியாத அளவுக்கு போதையில் இருந்த அந்த நபர் நடு ரோட்டில் விழுந்தார்...எழக் கூட நிதானமின்றி அவர் விழுந்து கிடந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கர்நாடகா அரசு பேருந்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்