துணை ராணுவ வீரர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற சக வீரர் - குஜராத்தில் பரபரப்பு | Gujarat

x

குஜராத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய துணை ராணுவ வீரர்கள் இருவரை, காவலரே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, மணிப்பூரில் துணை ராணுவத்தில் இருந்த வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போர்பந்தரில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களுக்கும், மத்திய ஆயுதப்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் பணியில் இல்லாத காவலர் ஒருவர் வீரர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுள்ளார். உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இரு வீரர்கள் உயிரிழந்த நிலையில், இரு காவலர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களே மோதலில் ஈடுபட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்