ஆசை மகளை இழந்த தாய்க்கு இப்படி ஒரு சோகமா..! உதவி கரம் நீட்டிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்

x

ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு ரயில் மோது உயிரிழந்த கல்லூரி மாணவியின் தாயாருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதையடுத்து அவருக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யா என்பவர் ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், ஆறுதல் தெரிவித்தார். மேலும், மாணவியின் தாயார் மார்பக புற்றூநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த ஆணையாளர் சங்கர் ஜிவால், அவருக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், காவல் கரங்கள் அமைப்பின் மூலம் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்