ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன்... விரக்தியில் விஷம் குடித்து...

x

சேலத்தில் ஆன்லைன் ரம்மியில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரின் மகன் சூரியபிரகாஷ். 20 வயதான இவர்,

பொறியியல் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இவர், அதில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த அவர், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பதறிப்போன பெற்றோர் மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவன் அளித்த வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்