உயிருக்கு ஆபத்தாகும் கட்டணமில்லா பேருந்து பயணம்.. படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவிகள்.. திகைக்கவைக்கும் காட்சிகள்

x

திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளி கல்லூரி மாணவிகள் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ராணி அண்ணா கல்லூரி மாணவிகள்,பேருந்து வசதி இல்லாததால் கிடைத்த பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர்.

கட்டணமில்லா பேருந்து மற்றும் சாதாரண கட்டண பேருந்துகள் கல்லூரி நேரங்களில் குறைந்த அளவில் பேருந்துகள் விடப்படுவதே இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்