கோவை இளைஞர்கள் போட்ட ரீல்ஸால் சிக்கலில் இன்ஸ்டா - போலீஸ் அதிரடி

x

அரிவாள், கத்தியுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்குவது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு சம்மன் அனுப்ப கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர். கோவையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் நிற்பது போன்ற புகைப்படம், மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். இதனை நீக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் அந்த பக்கத்தை இதுவரை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக, விசாரணை நடத்த சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கோவை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்