"காஃபி வித் கலெக்டர்" நிகழ்ச்சி.. மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்.. 12ம் வகுப்பு மாணவனின் பேச்சுக்கு பாராட்டு

x

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடிய காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை ஆட்சியர் மோகன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடூர் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர், தமிழ்நாட்டை மது அருந்துபவர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதே தனது லட்சியம் எனக் கூறி, பாராட்டுகளைப் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்