தென்னை மரம் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி - இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

x

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தேங்காய் வெட்ட தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வேளாண் தொழிலாளி மணிகண்டன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். போச்சம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் கொடமாண்டபட்டி கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்