நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் பலி

x

சென்னையில் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே மசூதி தெருவை சேர்ந்தவர் காமேஷ். இவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது வெள்ளானூர் அருகே, திடீரென நிலைதடுமாறிய வாகனம் மழை நீர் கால்வாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட காமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடன் பயணித்த இரு மாணவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்