கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல்... பேருந்தை வழிமறித்து பட்டியலின மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் - விழுப்புரத்தில் பதற்றம்

x

விழுப்புரம் அருகே, திருவெண்ணைநல்லூர் அடுத்த மேல்மங்கலம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டியலின இளைஞர்கள் மற்றும் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் கபடி விளையாடியபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் கிராம மக்களுக்கு தெரிய வரவே, இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆத்திரத்தில் இருந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், விழுப்புரத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் நோக்கி பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச்சென்ற பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களை தாக்கியதில், பட்டியலின சமூகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்