வீட்டின் முன் திருமண பேனர் வைத்ததால் ஆத்திரம்..பேனரை கிழித்ததுடன் தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல்

x

மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி கிராமத்தில் மகிமை ராஜ் என்பவரின் வீட்டின் முன் திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த மகிமை ராஜ் மற்றும் அவரது மனைவி, பேனரை குத்தி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் திருமண வீட்டாருக்கும், மகிமை ராஜ் தம்பதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றவே திருமண வீட்டாரை மகிமை ராஜின் மனைவி கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த திருமண வீட்டார் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே மருத்துவமனைக்கு மகிமை ராஜும் காயம் காரணமாக வந்த நிலையில் கோபத்தில் இருந்த திருமண வீட்டார் மகிமை ராஜை தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்