அதிமுக வேட்பாளரை தெருவுக்குள் நுழைய விடாமல் வழிமறித்து நின்ற பொதுமக்கள் - ஈரோட்டில் திடீர் பரபரப்பு

x

ஈரோடு கிழக்கு தொகுதியில், பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு புது வீதி வார்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சலசலப்பு ஏற்பட்டது.

மரப்பாலம் பகுதியில் உள்ள புது வீதியில், அதிமுக வேட்பாளார் தென்னரசு, வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் எந்தவித பணிகளும் நடக்கவில்லை எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆவேசமாக கூச்சலிட்டனர்.

இதனால் தென்னரசு பேச்சை நிறுத்திவிட்டு வேறு வழியாக சுற்றிச்சென்றார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் வீதிக்குள் நுழையாமல் இருக்க பொதுமக்கள் வழிமறித்து நின்றனர்.

தொடர்ந்து, திமுகவினர் அதிமுகவின் தோரணங்கள் மற்றும் கொடியை அகற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்