சின்சினாட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - வாகை சூடிய குரேஷிய இளம் வீரர் கோரிக்

x

சின்சினாட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - வாகை சூடிய குரேஷிய இளம் வீரர் கோரிக்


சின்சினாட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில் குரேஷிய இளம் வீரர் போர்னா கோரிக் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரேஷிய வீரர் கோரிக்கும், கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் வெற்றிக்காக இரு வீரர்களும் கடுமையாக போராடிய நிலையில், 7க்கு 6 என்ற செட் கணக்கில் கோரிக் வென்றார். தொடர்ந்து 2வது செட்டில் அதிரடி காட்டிய கோரிக், 6க்கு 2 என்ற செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்