கண்முன் ஆக்ரோஷ உடலுறவு கொண்ட சித்தி... பார்க்க கூடாததை பார்த்த 9 வயது மகன் - அடுத்து நடந்தது பயங்கரத்தின் உச்சம்..!

x

சித்தியின் தகாத உறவுக்கு தடையாக இருந்த ஒன்பது வயது சிறுவனை கொலை செய்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் கோபால், இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதில் இளைய மகன் பரந்தாமன் (9)நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

காளீஸ்வரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவருடன் கோபால் சேர்ந்து வந்துள்ளார். தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து கௌசல்யா வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுவன் பரந்தாமன் காணவில்லை என அவரது சித்தி கௌசல்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் தேடிய போது பாழடைந்த கிணற்றில் சிறுவன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சிறுவனுடைய பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு வந்துள்ளது. அதில் சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறான் என இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கௌசல்யாவிடம் தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர்.அப்போது தான் அந்த அதிர்ச்சிகரமான உண்மையை கூறியிருக்கிறார்.

கௌசல்யா அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேது காமேஷ் என்பருடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். பல சமயங்களில் கணவர் கோபால் வீட்டில் இல்லாத நேரத்தில், சேது காமேஷை வரவழைத்து நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். அப்படி ஒரு நாள் நெருக்கமாக இருந்தபோது சிறுவன் பரந்தாமன் இருவரையும் ஒன்றாக பார்த்திருக்கிறான்

சிறுவன் மூலமாக எங்கே தனது கணவருக்கு இந்த விஷயம் தெரிய வருமோ என கருதிய கௌசல்யாவும், சேது காமேஷம் சேர்ந்து சிறுவனை அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பாழும் கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் கௌசல்யாவை கைது செய்துள்ளனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் சேது காமேஷை கைது செய்ய தனிப்படை போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்