சீனா to தமிழகம்... உறுதியான கொரோனா... பரபரப்பில் விருதுநகர் கிராமம்

x

விருதுநகர் மாவட்டம் இலந்தைக் குளம் கிராமத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அக்கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்...

சீனாவில் இருந்து மதுரை வந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகளுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரது கணவர் சீனாவில் பணிபுரிந்த நிலையில், வேலை காரணமாக அவர் ஜெர்மனி செல்ல, உடனிருந்த மனைவியும் மகளும் விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளனர். தொடர்ந்து, இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இளந்தை குளம் கிராமத்தில் அவர்களது வீட்டில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் அக்கிராமத்தில் சிவகாசி துணை இயக்குனர் கழு சிவலிங்கம் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் அதிகாரி கழுசிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உருமாறிய பிஎஃப்7 கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தாய் மற்றும் மகளின் பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்