வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை துடி துடித்து பலி - வாசலிலே நடந்த கோர சம்பவம்

x

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஆழ்வார்குறிச்சி அருகே பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி - பிரேமாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை ஆதிரா, தனது தாத்தா மகேந்திரனுடன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை ஆதிரா, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகேந்திரன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்