"ஆசை ஆசையாய் பெற்ற குழந்தையை காணாமே.." மருத்துவமனை முன் கதறிய தாய் - அதிர்ச்சி கொடுத்த உறவினர்கள்

x

கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தையை காணவில்லை என்று கதறி அழுத பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கு 2 வயதில் தஷ்விகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்திலும் 5 நாட்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தனது பிறந்த குழந்தையையும், தனது 2 வயது மகள் தஷ்விகாவையும் காணவில்லை என தஷ்விகா கூச்சலிட்டார். அங்கே மருத்துவமனையில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது சந்தேகப்பட்ட காயத்ரி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிறந்த குழந்தையை காயத்ரிக்கு அறிமுகமான ஒரு பெண் தூக்கி சென்றதும், தஷ்விகாவை காயத்ரியின் தாய் அழைத்து சென்றதும் தெரியவந்தது. இதனால் மருத்துவமனை முழுக்க ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்