செங்கல்பட்டில் ஐ-போன் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

பெருமளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு, பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்ட ஐ-ஃபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக இன்று திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன், தனியார் தொழிற்சாலையின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக ஐ-ஃபோன் தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருப்பது, திராவிட மாடல் ஆட்சியில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழல் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்