வீடுகளுக்கு சீல்?...தீக்குளிக்க பாய்ந்த மக்கள் - சிதம்பரத்தில் பரபரப்பு

x

சிதம்பரம், வேங்கான் தெருவில் குரு நமச்சிவாய மடம் உள்ளது. இந்த மடத்திற்கு சொந்தமான இடத்தில் ஏராளமனோர் வீடுகள் கட்டியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், முதற்கட்டமாக 24 வீடுகளை சீல் வைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது

. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் அதிகாரிகள், வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கிய போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

வீடுகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்