செஸ் ஒலிம்பியாட்... இந்தியாவுக்கு திடீர் திருப்பம்

x

செஸ் ஒலிம்பியாட் ஓம்பதாம் சுற்று ஆட்டம் இந்தியாவுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஓபன் பிரிவில் இந்திய பி அணி, அஜர்பைஜான் அணியுடன் மோதிய நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

தமிழக வீரர் பிரக்ஞானந்தாவின் வெற்றி ஆட்டம் டிராவில் முடிந்ததால் சாதகமாக அமைந்தது.

இந்தியா பி அணியை சேர்ந்த தமிழக வீரர் முகேஷ், 9வது சுற்று ஆட்டத்தை டிரா செய்தார்.

ஓபன் பிரிவில் பிரேசில் அணியுடான போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது.

இந்திய ஓபன் சி அணி பராகுவே அணியுடன் மோதி 3-1 என்ற கணக்கில் இந்தியா-சி அணி வெற்றி பெற்றது.

மகளிர் பிரிவில் முதல் இடத்தில் இருந்த இந்திய ஏ அணி போலந்து அணியுடன் மோதி, தோல்வியை தழுவியுள்ளது.

இந்திய மகளிர் - பி அணி ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது.

இந்திய மகளிர்- சி அணி, எஸ்டோனியா அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

ஓம்பதாவது சுற்று முடிவில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும், இந்தியாவிற்கு சறுக்கலை சந்தித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்