காவல் நிலையத்தின் மேற்கூரையில் இருந்து நீர்க்கசிவு - காவல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றம்

x

காவல் நிலையத்தின் மேற்கூரையில் இருந்து நீர்க்கசிவு - காவல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றம்

சென்னை வியாசர்பாடி பகுதிக்கு உள்பட்ட காவல் நிலையத்தில் மேற்கூரை ஒழுகியதால், காவல் நிலையம் பூட்டப்பட்டது. இதையடுத்து, காவல் நிலையம் எதிரே உள்ள மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில், 3 காவலர்கள் மட்டும் தற்போது பணியாற்றி வருகிறார்கள். காவல் நிலையத்தின் மேற்கூரை, இரண்டு மாதத்திற்கு முன்பு பெயர்ந்து விழுந்தபோது, உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு காவல் நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், மழை காரணமாக மேற்கூரை ஒழுகியதால் வேறு வழியின்றி வேறு இடத்துக்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்