வேகமாக வந்த கார்... தடுக்க முயன்ற போலீசார்... மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் பரபரப்பு

x

சென்னை ராயப்பேட்டை போக்குவரத்து போலீசார், ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து மெரினா நோக்கி செல்லக்கூடிய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மியூசிக் அகாடமி மேம்பாலம் அருகே, வேகமாக வந்த காரை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், மோகன், போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் ஆகியோர் பிடிக்க முயன்றனர். ஆனால், வேகமாக வந்த கார், போக்குவரத்து காவலர் ஜெயக்குமார் மீது பயங்கரமாக மோதிவிட்டு, நிற்காமல் அங்கிருந்து சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காவலர் ஜெயக்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்