சென்னை TO மேற்கு வங்கம்... கொள்ளையர்களை தட்டி தூக்கிய தமிழக போலீஸ்

x

சென்னை அடுத்த புழல் பகுதியில் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 78 சவரன் நகை மீட்கப்பட்டது.

ரங்கா அவென்யூவை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 78 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்கு வங்கம் மாநிலத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.

இதனிடையே, மேற்கு வங்கத்துக்கு சென்று கமால்ஷேக் என்பவரை கைது செய்த தனிப்படையினர், 78 சவரன் நகையை மீட்டனர்.

மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்