இளைஞர்கள் பைக் சாகசம் ... "சிக்குபவர்களுக்கு சிறப்பு கவனிப்பு காத்திருக்கு..!" -போலீசார் வார்னிங்...

x

சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே, நள்ளிரவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இளைஞர்கள் அதிக ஒலி எழுப்பியபடி, தலைகவசம் அணியாமல் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, கிறிஸ்துமஸ் தினைத்தையொட்டி தேவாலயங்களுக்கு வந்த சில இளைஞர்கள், பைக் சாகசத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்