குப்பை மேட்டில் கிடைத்த வெள்ளி மோதிரம், பங்கு பிரிப்பதில் சண்டை.. 3 பேரை வெட்டி கொலை செய்த கொடூரம்

சென்னை பெருங்குடி குப்பை மேட்டியில் வெள்ளி மோதிரத்திற்காக 3 பேரை கொலை செய்து விட்டு, 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
x

2006ம் ஆண்டு பெருங்குடி குப்பை மேட்டில் குப்பைகளை பொறுக்கும் போது, பாபு என்பவருக்கு வெள்ளி மோதிரம் கிடைத்தது. அதை பார்த்த வேலு என்பவர் மோதிரம் கேட்டு பாபுவிடம் சண்டையிட்டுள்ளார். அந்த சண்டை அடிதடியில் முடிந்ததால், பாபுவின் தாய், தந்தை மற்றும் தம்பியை வேலு வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலைகளில் தொடர்புடைய அந்தோணி என்பவர் விசாரணைக்கு ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அந்தோணியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்