மூதாட்டியை அவதூறாக புகைப்படம் எடுத்த நபர்கள்.. தட்டிக்கேட்ட காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயன்ற கொள்ளையர்களுக்கு ஏற்பட்ட மாவுக்கட்டு

x

சென்னையில் மூதாட்டியிடம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இருவர் தப்பி செல்ல முயன்றபோது, கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, அரும்பாக்கத்தில் வீடு புகுந்து மூதாட்டியை கட்டி வைத்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றனர். இந்த வழக்கில் மூதாட்டியை அவதூறாக புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், மூதாட்டியை அவதூறாக படம் பிடித்த துரைசிங்கம் மற்றும் துரைபாண்டியன் ஆகிய இருவரிடமும் செல்போனை கேட்டு அரும்பாக்கம் அம்பேத்கார் காலனிக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, இருவரும் தப்பி செல்ல முயன்று, சுவர் ஏறி குதித்ததில் இருவரின் கை எலும்பு முறிந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், புகைப்படங்களை அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்