"குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால் தங்கம்" வசிய பேச்சில் விழுந்த மூதாட்டி.. அடுக்குமாடி வீட்டிற்கு அழைத்து சென்று மோசடி

x
  • மூதாட்டிகளை குறிவைத்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
  • சென்னை, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் வசந்தா என்ற மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்தால் ஒரு கிராம் தங்கம், இரண்டாயிரம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
  • அங்கு சென்றதும் தங்கம் அணிந்திருந்தால் நகை தர மாட்டார்கள் எனக் கூறி மூதாட்டியிடம் இருந்த கம்மலை அந்நபர் வாங்கி சென்றுள்ளார்.
  • பின்னர், நீண்ட நேரம் ஆகியும் அந்நபர் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
  • புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், திருமலை என்ற நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
  • மேலும், திருமலை மீது இதே போன்று மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை கொள்ளையடித்ததாக பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்