4 மாதமாக மகனை பார்க்காத ஏக்கம்... வீடியோ காலில் பார்த்து ஆனந்தம் அடைந்த தாய் - சில மணி நேரத்திலேயே தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

x

மேற்குவங்கத்தை சேர்ந்த சர்வல் உசேன் என்ற கட்டட தொழிலாளி, சென்னை தியாகராய நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்திருந்தார். 4 மாதகாலமாக மகனை பார்க்காத ஏக்கத்தில் இருந்த அவரது தாய், வீடியோ காலில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, சர்வல் உசேன் பணியில் இருந்ததால், சக தொழிலாளிகள், அவர் வேலை செய்து கொண்டிருப்பதை வீடியோ கால் மூலம் தாயிடம் காட்டியுள்ளனர். இந்த நிலையில், சர்வல் உசேன் கட்டுமான பணியில் இருந்தபோது, மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ காலில் மகனை பார்த்து ஆனந்தம் அடைந்த தாய்க்கு, சில மணி நேரத்திலேயே மகன் இறந்ததாக வந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்