"83% நிலம் கையகப்பட்டுத்தப்பட்டு உள்ளது" - மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை

x

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, இதுவரை 83 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 112 ஹெக்டேர் நிலத்தில் 93 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2-ஆம் கட்ட மெட்ரோ பணிகள் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில், 118 கிலோமீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்பட உள்ளதாகவும், வரும் 2026-ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்