ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா டெலிவரி - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி

x

சென்னை மதுரவாயலில், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல, கஞ்சா டெலிவரி செய்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஆன்லைனில் உணவு டெலிவரி மட்டுமின்றி, கஞ்சா போன்ற போதை பொருள்களையும் தமிழ்செல்வம் விற்பனை செய்து வந்துள்ளார்.

மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், போலீசார் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆலப்பாக்கம் பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் உடையுடன், சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது, உணவு டெலிவரி செய்யும் பையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பதைக் கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருப்பது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்