பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை... பட்டதாரி இளைஞர்கள், பெண்களுக்கு வலை - ஆசை வார்த்தை கூறி மோசடி!

x
  • சென்னையில், பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
  • சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் "சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்" என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார். இவர், பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.
  • இதை பார்த்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர், சான்றிதழ்களுடன் முன்பதிவு கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
  • வேலை உறுதி என பலரிடம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்த தினேஷ்குமார், திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.
  • இதுகுறித்த புகாரின்பேரில், தலைமறைவாக இருந்த தினேஷ்குமார் மற்றும் உடந்தையாக இருந்த ஈஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
  • கணினிகள், வாகனம், செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • தினேஷ்குமார் திருமுல்லைவாயல் பகுதியில் சொகுசு வீடு கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்