காசு இல்லாததால் ஐஸ்கிரீம்-ஐ திருடிச் சென்ற கொள்ளையர்கள் - அப்புறம் எனக்கு பசிக்கும்ல!!

x

சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 5 இளைஞர்கள் அங்கு பணம் இல்லாததால் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை திருடி சென்றனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஜீவா அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞர்கள் கடப்பாரையை கொண்டு கடையின் கதவை உடைத்து உள்ளே செல்வதும், ஐஸ் கிரீம் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை சாக்குபையில் திருடி செல்வதும் பதிவாகியிருந்தது. இருசக்க வாகன எண்ணை வைத்து திருட்டில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்