ஒரே மழையால் கூலான சென்னை.. கோடையை மறந்து.. குஷியில் மக்கள்

x

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி, ராமாபுரம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர், ஐயப்பன் தாங்கல், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்