"நான் 3 வகுப்பு படிக்கும் போது மூடப்பட்டது...இனி திறக்கவே மாட்டார்கள் என நினைத்தோம்..."AFTER 12 YEARS ரீ ஓபன் ஆன அண்ணாநகர் டவர்

x

சென்னையில் புகழ்பெற்ற அண்ணாநகர் டவரில் நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் காரணமாக, கடந்த 2011ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில் 97 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட அண்ணாநகர் டவரை, அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்பட்ட அண்ணாநகர் டவரை, மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் கண்டுகளித்தனர். அண்ணாநகர் டவர் தங்களது சிறுவயது நினைவுகளை ஞாபகப்படுத்துவதாக பார்வையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். முதல்நாளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்