சட்டவிரோதமாக தங்கி இருந்த தாய், மகள்...ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த போலீசார் - சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் போலி பாஸ்போர்ட் மூலம் தாய் மற்றும் மகள் இலங்கை செல்ல முயன்ற வழக்கில், போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்த பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
x

இலங்கை யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் கங்கா. இவர், கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மகள் ஸ்வர்ஜலாவுடன் வந்து கணவர் வீட்டாருடன் சென்னையில் தங்கியுள்ளார். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு கணவர் இறந்து விட, தனியே வசித்து இருவரின் பாஸ்போர்ட் கடந்த 2017 ஆம் ஆண்டி காலவதியாகியுள்ளது. இதையடுத்து, கடந்த 5 வருடங்களாக சட்டவிரோதமாக சென்னையில் வசித்து வந்த இருவரும், போலீ பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற போது போலீசில் சிக்கியுள்ளனர். விசாரணைக்கு பிறகு தாய் மற்றும் மகளினை சிறையில் அடைத்த போலீசார், போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்த புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்